கதற கதற ரோஹினியை வெளுத்து வாங்கிய விஜயா, கடைசியில் அவர் வைத்த செக்… சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை
மாமியார்-மருமகள் பிரச்சனையாக இப்போது சிறகடிக்க ஆசை சீரியலின் கதைக்களம் உள்ளது.
முதலில் ரோஹினி பொய் சொல்லி மனோஜை திருமணம் செய்துள்ளார் என்று தெரிந்ததும் கோபப்பட்ட விஜயா அவரை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டு விவாகரத்து வாங்க போராடு வருகிறார்.
இதற்கு இடையில் சாமியாரை வைத்து மீனாவை வீட்டைலிட்டு வெளியே சிந்தாமணி ஒரு பிளான் போட்டு அதில் வெற்றியும் கண்டார். விஜயாவும் மீனாவை வீட்டைவிட்டு அனுப்பியதால் சந்தோஷப்பட்டார்.
ஆனால் அந்த சாமியார் ஒரு திருடி என்பதை கண்டுபிடித்து மீனாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் முத்து. சாமியாரை ஏற்பாடு செய்து ஏமாற்றியது ரோஹினி தான் என்பதை தெரிந்துகொண்ட விஜயா அவரை பழிவாங்க நினைக்கிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், ஆசையாக அழைத்தை மனோஜை நம்பி ரோஹினி அவரது ஷோரூமிற்கு செல்கிறார். அங்கு மனோஜ் நண்பன் சந்தோஷிற்கு சாட்டை அடி கொடுத்த நபரை வரவைக்கிறார்.
ரோஹினி ஷோமிற்கு வந்து விஜயாவை அங்கு கண்டதும் ஷாக் ஆகிறார்.
விஜயா தன்னை சாமியாரை வைத்து ஏமாற்றிய விஷயத்தை ரோஹினியிடம் கூறி திட்டுகிறார். ஆனால் ரோஹினியோ நான் எதையும் செய்யவில்லை என கூற மனோஜ்-விஜயா இருவரும் கோபப்படுகிறார்கள்.
விஜயா இத்தனை நாள் இவளை விட்டுவைத்தது தப்பு, இவளுக்கு கொடுக்க வேண்டிய கொடு என விஜயா கூற ஏற்பாடு செய்த சாட்டை நபரை அழைக்கிறார் மனோஜ். பின் ரோஹினி கதற கதற சாட்டை அடிக்கும் நபர் அவரை அடிக்கிறார்.
ரோஹினியை பார்க்க அவரது விட்டிற்கு சென்ற சிந்தாமணி, அந்த சாமியார் பெண்ணிடம் நான் தான் நீ பிளான் போட்டுக்கொடுத்த என சொல்ல வைத்தேன். என்னை சொல்லியிருந்தால் விஜயாவுடன் இருக்கும் நட்பு உடைந்துவிடும், பின் அவர் என்ன செய்கிறார் என்பது நமக்கு தெரியாமல் போய்விடும் என கூறி சமாளிக்கிறார்.
கடைசியாக விஜயாவை தேடி அவரது வீட்டிற்கு ரோஹினியால் ஒரு நபர் வருகிறார். அவரால் விஜயாவிற்கு பிரச்சனை வரப்போகிறது, யார் அவர் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்த வாரம் காண்போம்.






