அறிவுக்கரசிக்கு பளார்.. ஈஸ்வரி பற்றி சொன்னதும் அலறிய குணசேகரன்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது ஜனனி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவரை எதாவது செய்ய வேண்டும் என வில்லன் ஆலிவர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
மறுபுறம் கோமாவில் இருக்கும் ஈஸ்வரி மீண்டு வர போகிறார் என மற்ற பெண்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இன்றைய ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய எபிசோடு ப்ரோமோவில், ‘ஈஸ்வரி எழுந்து வந்ததும் அவரை அந்த நிலைக்கு ஆளாகியவர்களை சட்டப்படி என்ன செய்யணுமோ செய்யலாம்’ என ஜனனி கூறுகிறார்.
அதன் பின் விசாலாட்சி உண்மையை வீட்டில் போட்டு உடைக்கிறார். ‘ஈஸ்வரி கண் விழிக்கப்போறா’ என அவர் சொல்ல ஆதி குணசேகரன் கடும் ஷாக் ஆகிறார்.
மேலும் அறிவுக்கரசிக்கு ஒரு பளார் விடுகிறார் அவர். ப்ரோமோவை பாருங்க.






