பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்… அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ

தாமரைச் செல்வி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் தாமரைச் செல்வி.
சில வருடங்களுக்கு முன்பு கோவில் திருவிழா மேடைகளில் நடனம் ஆடிக்கொண்டிருந்த தாமரை செல்விக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்த தாமரைச்செல்வி நிகழ்ச்சி முடிந்ததும் நிறைய ரியாலிட்டி ஷோ, சீரியல்கள் என கமிட்டாகி நடித்து வந்தார். கடைசியாக இவர் விஜய்யில் ஒளிபரப்பான சின்ன மருமகள் சீரியலில் நாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஆனால் தொடரில் இருந்து சில காரணங்களால் வெளியேறிவிட்டார்.
ஏமாற்றம்
இந்த சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடிக்கும் ஸ்வேதாவிற்கும் அவரது கணவர் ஆதிக்கும் பிரச்சனை இருப்பது ஏற்கெனவே தெரிந்தது தான். அவர்களின் பிரச்சனை ஒருபக்கம் செல்ல இப்போது வேறொரு பிரச்சனை வெடித்துள்ளது.
அதாவது ஸ்வேதாவின் கணவர் ஆதி, தாமரைச் செல்வியிடம் ஒரு கஷ்டத்திற்காக அவரிடம் பணம் கேட்டுள்ளார். தாமரைச் செல்வி தனது நகையை அடைமானம் வைத்து பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் பணம் வாங்கி இப்போது என்னை ஏமாற்றிவிட்டான், இவன் சரியான பிராடு என கண்கலங்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இவன் பெயரில் இப்போது போலீஸில் புகார் அளித்துள்ளேன், நீங்கள் யாரும் இவனை நம்பி ஏமாற வேண்டாம் என வீடியோ போட்டுள்ளார்.






