பெண் உயிரிழந்த விவகாரம்: அல்லு அர்ஜுனிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை

பெண் உயிரிழந்த விவகாரம்: அல்லு அர்ஜுனிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை


ஐதராபாத்,

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. முன்னதாக இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது.

அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பினர். நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி போலீசாரால் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் பதிலளித்தார்.

இந்நிலையில் நாம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு வழக்கிய 14 நாள் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. அல்லு அர்ஜுன் நீதிமன்றம் வந்தால் மீண்டும் ரசிகர்கள் கூட்டம் சேரும் என்பதால் நேரில் ஆவதில் இருந்து விலக்கு அளித்து காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிபதி கூறியதால் அதிகாரிகள் அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்தனர். இதனையடுத்து காணொலி காட்சி மூலம் அல்லு அர்ஜுன் நீதிபதி முன்பு ஆஜாரானார்.

அப்போது அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளதால் அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்கள் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜராகி நிரந்தர ஜாமின் வழங்க கேட்டு கொண்டனர். இதற்கு நீதிபதி அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய கூறியதால் போலீசார் இதற்கு கால அவகாசம் வேண்டும் என கூறினர். இதனால் 30 ம் தேதிக்கு இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *