விஜய் படத்தில் ‘கரு கருப்பாயி பாடல்’ காப்புரிமை கேட்காதது ஏன்?.. தேவா சொன்ன காரணம்

விஜய் படத்தில் ‘கரு கருப்பாயி பாடல்’ காப்புரிமை கேட்காதது ஏன்?.. தேவா சொன்ன காரணம்


கரூர்,

இசையமைப்பாளா் தேவா, கரூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; நான் ஏராளமான மெல்லிசை பாடல்கள், குத்துப்பாட்டு, கானா பாட்டு, மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறேன், பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்கள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வேகமாக பரவி வருகின்றன. தேவா கானா பாடல் மட்டும்தான் பாடுவாா் என நிறைய போ் நினைக்கிறாா்கள். கானாவும், மெல்லிசை பாடல்களும் எனது இரு கண்கள். ஆனால், கானா பாடல்கள் மூலம்தான் நான் உலகளவில் பிரபலமானேன். தற்போது நிறைய போ் பாடல்களுக்கு காப்புரிமை கேட்கிறாா்கள். ஆனால், நான் அதைப்பற்றி சிந்திப்பதே கிடையாது. தற்போது 3 புதிய படங்களுக்கு இசையமைக்கிறேன். பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறாா்கள் என்பதற்காக இப்போதுள்ளவா்கள் நன்றாக இசையமைக்கவில்லை எனக் கூற முடியாது .

நான் காப்புரிமை எதுவும் கேட்பது இல்லை. இப்போ என்னுடைய பழைய பாடல்கள் எல்லாம் இப்போது ஹிட்டாகி வருகிறது. கரு கருப்பாயி என்ற பாடல் இப்போ ஒரு படத்தில் (விஜய் நடித்த லியோ படத்தில்) வந்து பயங்கர ஹிட் ஆனது. அந்த பாடல் 2000ல் நான் இசையமைத்தது. சமீபத்தில் ஒரு மால் ஒன்றிற்கு சென்றேன். அப்போது , ஒரு சின்ன பையன் வந்தான். அந்த சிறுவனின் தந்தை என்னை பார்த்ததும், கரு கருப்பாயி பாடலுக்கு இசை அமைத்தது இவர்தான் என்று தனது மகனிடம் கூறினார். இதைக்கேட்ட அந்த சிறுவன்..என்னை பார்த்து கை கொடுத்தான். இப்போ இருக்க பசங்களுக்கும் தெரிகிறது அல்லவா..அந்த பாடலுக்கு நான்தான் இசை அமைத்தது என்று. அதனால்தான் நான் எந்த பாடலுக்கும் காப்புரிமை கேட்பது இல்லை” என்றார்.

“கரு கருப்பாயி” பாடல் பிரபு தேவா நடிப்பில் 2000ம் ஆண்டு வெளியான “ஏழையின் சிரிப்பில்” என்ற படத்தில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *