பாலிவுட் செல்கிறாரா சிவகார்த்திகேயன்?…பிரபல இயக்குனருடன் சந்திப்பு

பாலிவுட் செல்கிறாரா சிவகார்த்திகேயன்?…பிரபல இயக்குனருடன் சந்திப்பு


மும்பை,

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மும்பையில் உள்ள திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இது ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை தூண்டியுள்ளது.

மேலும், இந்த சந்திப்பு இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளார்களா என்ற ஆர்வத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும், அது மக்களைப் பேச வைத்துள்ளது. காரணம் எதுவாக இருந்தாலும், இந்த சந்திப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கி உள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *