இயக்குநர் முருகதாஸுக்கு நன்றி தெரிவித்த அனிருத்

இயக்குநர் முருகதாஸுக்கு நன்றி தெரிவித்த அனிருத்


சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘மதராஸி’ படம் டிரெய்லர் வெளியாகி வைரலானது. ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

‘மதராஸி’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. ‘மதராஸி’ படத்தின் முழு ஆல்பம் வெளியானது.

‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி கோயம்பத்தூர், கொச்சி, ஐதராபாத் என பல இடங்களில் புரோமோஷன் செய்துள்ளனர்.

‘மதராஸி’ பட விழாவில் இசையமைப்பாளர் அனிருத் “வெறும் 2 படங்களில் மட்டுமே பணியாற்றிய எனக்கு முதன்முதலாக ‘கத்தி’ என்ற பெரிய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். மான் கராத்தே, கத்தி என டபுள் ட்ரீட்டாக கொடுத்தார். நான் இந்த இடத்திற்கு வந்ததற்கு அவர்தான் காரணம்” என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை புகழ்ந்துள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *