“ராஜா சாப்” படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிய பிரபாஸ்

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘கல்கி 2898 ஏடி’ படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. அதனை அடுத்து தற்போது, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்து வருகிறார்.
பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்து வருகிறார்.
காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 17ம் தேதி கேரளாவில் நடக்கிறது. அங்கு பிரபாஸ்-இன் இண்ட்ரோ பாடல் மற்றும் மற்றொரு பாடல் படமாக்க இருக்கிறது. அக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.