வேறொரு இடத்தில் Snehalayaa புதிய கடையை திறந்துள்ள நடிகை சினேகா.. எங்கே பாருங்க, வீடியோவுடன் இதோ

நடிகை சினேகா
புன்னகை அரசியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா.
தனது சிரிப்பால் ரசிகர்கள் கூட்டத்தை பெற்ற இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடைசியாக சினேகா, விஜய்யின் கோட் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார்.
புதிய கடை
நடிகை சினேகா சென்னையில் Snehalayaa என்ற புடவை கடை திறந்திருந்தார்.
அந்த கடை நன்றாக ஓடிக் கொண்டிருக்க இப்போது முக்கிய இடத்தில் புதிய கடை திறந்துள்ளார் நடிகை சினேகா. கோயம்புத்தூரில் தனது 2வது புடவை கடையை அண்மையில் திறந்துள்ளார் சினேகா, அவருக்கு ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.






