10 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குநர்.. எஸ்.ஜே. சூர்யாவின் எமோஷ்னல் பதிவு

10 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குநர்.. எஸ்.ஜே. சூர்யாவின் எமோஷ்னல் பதிவு


எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமாவில் முதன் முதலில் இயக்குநராக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் வில்லனாக கலக்கிக்கொண்டு இருப்பவர் எஸ்.ஜே. சூர்யா.

ரசிகர்கள் இவரை நடிப்பு அரக்கன் என அழைத்து கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

பின் விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். தொடர்ந்து இயக்குநராக படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே. சூர்யா ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என முடிவு செய்தார்.

இறைவி படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். அதை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு ‘இசை’ படத்தை இயக்கி நடித்திருந்தார்.

10 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குநர்.. எஸ்.ஜே. சூர்யாவின் எமோஷ்னல் பதிவு | Sj Surya Going To Be Director Again

எமோஷ்னல் பதிவு 

தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு கில்லர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக எஸ்.ஜே. சூர்யா அவரது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.     




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *