நெருக்கமான காட்சிகள் நடிப்பது அப்படி இருக்கும்… நடிகை மதுபாலா ஓபன் டாக்

மதுபாலா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய ஒரு சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது.
அப்படி ரோஜா, ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை மதுபாலா.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
பீக்கில் இருந்த போதே அதாவது 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமையா, கியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் இடையில் சில படங்கள் நடித்துவந்தவர் இப்போது படு பிஸியாக நடிப்பில் களமிறங்கி படங்கள் நடித்து வருகிறார்.
நடிகை பேட்டி
தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் தயாராகியுள்ள கண்ணப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மதுபாலா.
இப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பேசும்போது, நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தர்ம சங்கடமாக இருக்கும், அதனால் பல படங்களை நிராகரித்துவிட்டேன்.
ஒரு படத்தில் என்னிடம் முன்கூட்டியே சொல்லாமல் முத்தக் காட்சியில் நடிக்க சொன்னார்கள். அதுவும் உதடு முத்தக் காட்சியில் நடிப்பதற்கு என்னிடம் அதிக நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த காட்சியில் நடிக்க எனக்கு மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது என கூறினார்.