பெண்கள் என்றால் அதற்கு மட்டும் தானா?… பொங்கிஎழுந்த நடிகை பார்வதி

நடிகை பார்வதி
தமிழ் சினிமாவில் தைரியமாக எல்லா விஷயங்களையும் பேசக் கூடிய ஒரு நடிகை தான் பார்வதி.
மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.எப்போதும் சமூகப் பிரச்சினைகளுக்காகவும், சினிமா துறையில் பெண்களுக்காகவும் குரல் கொடுப்பார்.
பேட்டி
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், திரைப்படங்களில் கதைகளை பாலின ரீதியாகப் பிரிப்பது தேவையற்றது.
நாம் உருவாக்கும் படங்களை பெண்களை மையப்படுத்திய படங்கள் என தனியாக பிரிக்கக் கூடாது. அனைத்து கதைகளும் மனிதர்களை மையப்படுத்திய கதைகளாகவே சொல்லப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
நான் நடிக்க வந்த முதல் 7 வருடங்களில் எனக்கு வந்ததெல்லாம் காதல் கதைகளே, அப்படி நடித்து நடித்து எனக்கு சோர்வாகிவிட்டது.
பெண்களுக்கு காதலை தவிர வேறு எந்த வேலையுமே இருக்காதா?. அதன்பிறகு தான் கதாபாத்திரங்களின் தனித்தன்மை என்ன என்று பார்க்க துவங்கினேன் என்றார்.






