லஞ்சம் கொடுக்க சென்ற விஜயாவிற்கு நேர்ந்த கதி, திமிரு காட்டும் மனோஜ்… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
கூட்டுக் குடும்பமாக வாழ ஆசைப்படும் அண்ணாமலை, பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் அண்ணாமலையின் மனைவி விஜயா ஆகியோரின் குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியல்.
கதையில் மனோஜிற்கும் ரோஹினிக்கும் விவாகரத்து கிடைக்குமா இல்லையா, எப்போது பிரச்சனை முடியும் என்பது தெரியவே இல்லை.
இப்போது விஜயா ஒரு நபரை ஏற்பாடு செய்து ரோஹினியை அடித்த பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
எபிசோட்
இன்றைய எபிசோடில், விஜயா லஞ்சம் கொடுக்க இப்போது அது ரோஹினிக்கு சாதகமாக ஆகிவிட்டது. அந்த மாதர் சங்க அதிகாரி விஜயா லஞ்சம் கொடுக்கும் போது கோபப்பட்டு அங்கிருந்து செல்கிறார்.
வீட்டிற்கு வந்து ரவி எல்லா விஷயத்தையும் குடும்பத்தினரிடம் கூற அனைவரும் விஜயாவை கேள்வி கேட்கிறார்கள். பின் அண்ணாமலை அந்த அதிகாரி நீதிமன்றத்தில் நமக்கு எதிராக பேசினால் கண்டிப்பாக விவாகரத்து கிடைக்காது.
இதனால் அந்த அதிகாரியிடம் முதலில் ரோஹினி யார், அவள் நமது குடும்பத்துக்கு என்னென்ன செய்தார் என்பதையெல்லாம் அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்கிறார். அதற்கான முயற்சியில் மனோஜிடம், முத்து-மீனா அந்த அதிகாரியிடம் நேராக சென்று உனக்கு ரோஹினியால் என்னென்ன நடந்தது என கூற சொல்கிறார்கள்.
ஆனால் மனோஜ் திமிராக அவர் யார், அவரிடம் போய் நான் ஏன் கெஞ்ச வேண்டும், என்னால் முடியாது, என் பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.






