பாண்டியனை ரோட்டில் கெஞ்சவிட்ட கோமதி… கலகலப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கதிர்-ராஜிக்கு தனக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்துவிட்டு இத்தனை நாள் மறைத்து வைத்திருக்கிறாய் என தனது மனைவி கோமதி மீது செம கோபத்தில் உள்ளார் பாண்டியன்.
அவரது கோபம் கடந்த சில வாரங்களாகவே காட்டப்படுகிறது, கோமதியும் கெஞ்சி பார்த்தார், முரண்டு பிடித்து பார்த்தார் எதற்கும் அவர் படிவதாக இல்லை.
இதனால் இனி உங்களை பேச வைக்க நான் எதுவுமே செய்யப்போவதில்லை, நீங்கள் பேசினால் என்ன பேசவில்லை என்றாலும் எனக்கு என்ன என இருக்கிறார். கடந்த வார புரொமோவில், மயில் அம்மா-அப்பா, பாண்டியன் வீட்டிற்கு வந்து சரவணன் இன்னொரு பெண்ணுடன் சுற்றுகிறார் என சண்டை போட்டனர்.
புரொமோ
தற்போது இந்த வாரத்திற்கான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், கோமதி நடுரோட்டில் நடந்துகொண்டிருக்க அவரிடம் கெஞ்சியபடி பாண்டியன் பின்னாலேயே நடந்து வருகிறார்.
கோமதியும் பாண்டியனை கோபமாக பேசிக்கொண்டே வருகிறார்.
இதோ அந்த கலகலப்பான புரொமோ,






