பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சதீஷ் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்… வருந்தும் ரசிகர்கள்

பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் கொரோனா காலகட்டத்தில் சில புதுமுகங்கள் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் சதீஷ். கொஞ்சம் வில்லன் சாயலில் தொடரில் நடித்தாலும் நிஜத்தில் மிகவும் ஜாலியான ஒரு மனிதர்.
தனது இன்ஸ்டாவில் எப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ, படப்பிடிப்பு தள போட்டோ என எதையாவது பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
பாக்கியலட்சுமி சீரியல் முடிந்த பிறகு சதீஷ் எந்த தொடரில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சதீஷ் பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி சுசித்ராவுடன் இணைந்து புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வந்தன.
ஷாக்கிங் நியூஸ்
மீண்டும் பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி சதீஷ்-சுசித்ரா இருவரும் ஒன்றாக இணைந்து மீண்டும் நடிக்க இருக்கிறார்கள் என்று வந்த செய்தி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.
ஆனால் தற்போது நடிகர் சதீஷ் தனது இன்ஸ்டாவில் ஒரு ஷாக்கிங் நியூஸ் வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த சில நாட்களாக நான் விஜய் டிவியில் மீண்டும் நடிக்க இருக்கும் புதிய சீரியல் குறித்து தகவல் கசிந்தது. தற்போது நான் புதிய சீரியலில் நடிப்பதாக இல்லை, அவர் புராஜக்ட் கைகூடி வரவில்லை.
வேறொரு புராஜக்டில் கண்டிப்பாக விரைவில் சந்திப்பேன் பார்ப்போம் என ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல் வெளியிட்டுள்ளார்.






