ஒவ்வொரு இந்தியனும்.. துரந்தர் 2 படத்தை வியந்து பாராட்டிய ரஜினி
சமீபத்தில் ரிலீஸ் ஆன துரந்தர் 2 படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது. 700 கோடியை வசூல் நெருங்கி இருக்கும் நிலையில் விரைவில் 1000 கோடியை வசூல் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் படத்தை பார்த்து வியந்து பாராட்டி இருக்கிறார்.
ஒவ்வொரு இந்தியனும்..
தனது பதிவில் ரஜினி கூறி இருப்பதாவது..
” துரந்தர் 2.. என்ன ஒரு படம்!!! ஆதித்யா தார் பாக்ஸ் ஆபிஸின் Baap!!! ரன்வீர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்” என ரஜினி கூறி இருக்கிறார்.
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳 @AdityaDharFilms @RanveerOfficial
— Rajinikanth (@rajinikanth) March 23, 2026






