சக்தி தேவசகாயம் சொன்ன விஷயத்தால் ஷாக் ஆன ஜனனி, நேரடி மோதல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களம் அமைந்து வருகிறது.
கதையில் ஜனனி கர்ப்பமாக இருப்பதால் அவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள கொடைக்கானல் அழைத்து சென்றார்.
இருவரும் அங்கு சந்தோஷமாக இருக்க அதேசமயம் தேவசகாயம் ஜனனியை கொடைக்கானலில் பார்த்ததால் அவரை அங்கேயே கொலை செய்ய பிளான் போடுகிறார்.
இன்னொரு பக்கம் ஒரு பூஜை ஏற்பாடு செய்து ஜனனியை அழிக்க குணசேகரன் ஒரு பிளான் போட்டுக்கொண்டு இருக்கிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், போலீஸ் தேவசகாயம் புகைப்படத்தை அனுப்ப அதைப்பார்த்து ஜனனி இவர்தான் என உறுதிப்படுத்துகிறார்.
அந்த போட்டோவை பார்த்த சக்தி இவர் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பக்கத்தில் தான் இருந்தார் என கூற ஜனனி ஷாக் ஆகிறார்.
பின் வீட்டில் குணசேகரன் வழக்கில் இருந்து தப்பிக்க தனது அம்மாவை ஏதேதோ பேசி மனதை மாற்ற வைத்துள்ளார்.






