பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி… என்ன பாருங்க

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
நேற்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி வீட்டிற்கு மீனா செல்கிறார். அங்கு பேச்சு வாக்கில் அவர் மயில் பற்றி பேச கோமதி திட்டுகிறார், அவரைப்பற்றி பேச வேண்டாம் என்கிறார்.
அரசியும் அவர் பெயரை சொல்லாதீர்கள், எனக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்றது நியாபகம் வருகிறது என்கிறார்.
உடனே மீனா, கோமதியிடம் தனியாக சென்று நீங்கள் நாளைக்கு கோவிலுக்கு வருகிறீர்களா அங்கு ஒரு விஷயம் பேச வேண்டும் என்கிறார். முதலில் வேலை இருக்கிறது என கூறிய கோமதி பின் வருகிறேன் என ஒப்புக்கொள்கிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், செந்தில் முதன்முறையாக லஞ்சம் வாங்குகிறார், முதலில் அதை வாங்க பயந்தவர் கடைசியாக பணத்தை வாங்கிவிடுகிறார். அதை வீட்டிற்கு எடுத்து வந்தவர் மீனாவிற்கு தெரியாமல் வீட்டில் வைக்கிறார்.
அந்த நேரம் அவரது மாமனார், மாமியார் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது செந்திலிடம், அவரது மாமனார் லஞ்சம் வாங்கியது பற்றி குற்ற உணர்ச்சி எல்லாம் வேண்டாம், தவறில்லை, ஆனால் கொஞ்சம் பார்த்து இருக்க வேண்டும் அவ்வளவு தான் என்கிறார்.
இந்த எபிசோடில், செந்தில் மற்றும் அவரது மாமனாரின் குரல் மாற்றப்பட்டுள்ளது.
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், மீனா கேட்டது போல் கோமதி கோவிலுக்கு வருகிறார், அங்கு மயிலை பார்த்து அவர் கோபப்பட அங்கு யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் மயிலின் அம்மா வந்துவிடுகிறார். அவரைப் பார்த்த கோமதி இன்னும் ஷாக் ஆகிறார்.






