குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
அட என்னப்பா, உலகத்தில் இப்படி கூட பிளான் போடுவார்களா என மக்கள் ஷாக் ஆகும் அளவிற்கு தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் அமைந்து வருகிறது.
திருச்செல்வம் இயக்கும் கதை, குடும்பம் பார்க்கும் கதையாக இருக்கும் என்று பார்த்தால் எப்போது பார்த்தாலும் சூழ்ச்சி, பெண்கள் அடிக்கி ஒடுக்குவது, கடத்துவது, சொத்து வைத்து பிளாக்மெயில் செய்வது என இப்படியே கதை ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது கூட குணசேகரன் சொத்தை வைத்து தனது தம்பிகளிடம் விளையாட ஆரம்பித்துவிட்டார்.
புரொமோ
தற்போது சீரியல் குறித்து வந்த புதிய புரொமோவில், ஆடிட்டர் வீட்டிற்கு வந்து குணசேகரன் ஜாமின் கேன்சல் ஆகும் நிலைமையில் உள்ளது. அதனால் சொத்தை உங்கள் இருவரின் பெயரில் குணசேகரன் மாற்றியுள்ளார், அதனை நிர்வகிக்கும் பொறுப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மதிவதனி, கமிஷனரிடம் மிகவும் அழுத்தம் கொடுத்துள்ளதால் ஜாமினில் சிக்கல். இன்னும் சில தினங்களில் உங்கள் அண்ணன் ஜெயிலுக்கு சென்றுவிடுவார் என கூற தம்பிகள் பதறுகிறார்கள்.
ஆனால் ஜனனி மற்ற அனைவரும் இதில் ஏதோ குணசேகரன் புது பிளான் போட்டுள்ளார், அது என்னவென்று தெரியவில்லை என யோசிக்கிறார்கள்.






