கர்ப்பமான ஜனனி.. ஆனால் மருத்துவர் சொன்ன அதிர்ச்சி விஷயம்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ

எதிர்நீச்சல்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் 2. இந்த சீரியலில் தற்போது உயிர் பிழைத்த ஜனனி மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்குள் வந்தவுடன் பழைய பகையெல்லாம் மறந்து அப்பாவிற்காக செய்யப்படும் பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் என ஆதி குணசேகரன் கேட்டுக்கொண்டார். அதற்காக ஜனனி – சக்தி இருவரும் அமைதியாகினார்கள்.
கர்ப்பமாக இருக்கும் ஜனனி
பூஜை நடந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென ஜனனி அங்கிருந்து எழுந்திருக்க, பூஜை தடுத்து நிறுத்தத்தான் இப்படி செய்கிறாள் என அறிவுக்கரசி கூறுகிறார். ஆனால், மருத்துவர் வந்து ஜனனியை பரிசோதித்த பின்தான் தெரிகிறது, அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று.
ஜனனி கர்ப்பமாக இருக்கிறார் என மருத்துவர் கூறியதும் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இதன்பின், சக்தியிடம் தனியாக பேசவேண்டும் என மருத்துவர் கூறுகிறார். ஜனனி உடல்நிலை மிகவும் வீக்-ஆக இருப்பதாகவும், அவரை சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சக்தியிடம் மருத்துவர் கூறுகிறார். வேறு எந்த பிரச்சனையும் இல்லையே என சக்தி கேட்க, வேறு எதுவும் இல்லை ஜனனியை மட்டும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு புறப்படுகிறார் மருத்துவர்.
இது நல்ல செய்தியாக இருந்தாலும், அடுத்து ஆதி குணசேகரனால் என்னென்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






