கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்… எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவி, சீரியல்கள் என்றாலே நாங்க தான் கெத்து என கலக்கிக் கொண்டிருப்பவர்கள். இந்த தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது.
குணசேகரன் என ஆணாதிக்கம் கொண்ட ஒருவரை அழிக்கும் சக்திகளாக பெண்கள் முன்னேறும் கதையே இந்த தொடரின் கரு. முதல் பாகம் முடிந்து 2வது பாகமே வந்துவிட்டது, ஆனால் குணசேகரனுக்கு ஒரு தக்க தண்டனை கிடைக்கவில்லை.
கதையில் மீண்டும் மீண்டும் பெண்களே சோதனைகளை சந்தித்து வருவது போல் காட்சி அமைகிறது.
புரொமோ
இன்றைய எபிசோடில், ஜனனி அடுத்த என்ன பிரச்சனை வரப்போகிறது, எப்படி சமாளிப்பது போன்ற விஷயங்களை பேசிவிட்டு வருகிறேன் என எங்கேயோ கிளம்புகிறார்.
இன்னொரு பக்கம் தர்ஷன் வீட்டிற்கு வந்து ஏதோ கூற அதற்கு விசாலாட்சி, குடும்பம் சிதறக் கூடாது என்பதற்காக தான் உனது சித்திகள் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள், நீ என்ன புதிய பிரச்சனை கிளப்புகிறாய் என கேட்கிறார்.
இது குணசேகரன் வேலையா, தர்ஷன் என்ன சொன்னார் என்பதையெல்லாம் இன்றைய எபிசோடில் காண்போம்.






