இனி கதையின் நாயகனாகவே எனது பயணம் – நடிகா் சூரி | my journey will be as the hero of the story

இனி கதையின் நாயகனாகவே எனது பயணம் – நடிகா் சூரி | my journey will be as the hero of the story


திருச்சி ,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. விடுதலை 2 படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முழுக்க முழுக்க அரசியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் , “விடுதலை 2” திரைப்படத்தை பார்க்க வந்த நடிகர் சூரி, செய்தியாளர்களுடன் படத்தைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

நடிகர் சூரி செய்தியாளா்களிடம் கூறியது: ‘இந்தப் படத்தில் வாத்தியார் யார் என்பதை விரிவாக விளக்கும் காட்சிகள் உள்ளன. நானும் இப்படத்தில் முக்கியமான ரோலை செய்துள்ளேன். அடுத்தடுத்த படங்களில் கதையின் நாயகனாகவே எனது பயணம் இருக்கும் என்றார்.மேலும்,நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து நடிக்கத் தயார்.ஆனால், அந்த படத்தில் யார் ஹீரோ என்பது சிவகார்த்திகேயன்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எப்போதும் ஹீரோ எனது தம்பி சிவகார்த்திகேயன்தான்’ என்றாா்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *