கூலி பட நடிகை ரச்சிதா ராம் திருமணம் எப்போது?.. ரசிகர்கள் வருத்தம்!

ரச்சிதா ராம்
கன்னட சினிமாவில் தனது திறமையால் ரசிகர்களின் இதயங்களை கைப்பற்றியவர் ரச்சிதா ராம். இவர் முதன் முதலாக கூலி படத்தில் வில்லி ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். தற்போது 33 வயதான நடிகை ரச்சிதா ராம் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணம் எப்போது?
இந்நிலையில், ரச்சிதாவிடம் நிருபர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன்.
எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கனவும் இல்லை. வீட்டில் எனக்கு வரன் பார்க்கும் படலம் வேகமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.