நிறம் போகாமல், முடியை கருமையாக்க சரியான வழி இதோ..!

நரை முடி பிரச்சனை இன்று பலருக்கும் பழகிவிட்டது. வயது அதிகரிக்கும்போது, மன அழுத்தம், மாசுபாடு மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் தலைமுடி முன்கூட்டியே நரைக்கத் தொடங்குகிறது.
இந்த பிரச்சனையிலிருந்து விடுபட பலர் ரசாயன சாயங்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இந்த சாயங்கள் முடிக்கு தீங்கு விளைவிக்கும்.
அப்படிப்பட்ட நிலையில் முடியை இயற்கையாக கருப்பாக்குவது தான் சிறந்த வழி, அந்தவகையில் இன்று கூந்தலை கருப்பாக்குவதற்கான ஒரு இயற்கை செய்முறையை குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- மருதாணி – 3-5 ஸ்பூன்
- நெல்லிக்காய் – 2 ஸ்பூன்
- பிரிங்ராஜ் – 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 1 தேக்கரண்டி
- சீகைக்காய் – 1 தேக்கரண்டி
- கருப்பு தேநீர் – 1 கப்
- தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
எப்படி தயாரிப்பது?
- முதலில் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் நன்றாகக் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- அடுத்த நாள் 5-7 ஸ்பூன் மருதாணி எடுத்து, அதை வெதுவெதுப்பான நீரில் கலந்து தலைமுடியில் தடவி சுமார் ஒரு மணி நேரம் அப்படியே விடவும்.
- நேரம் முடிந்ததும், முடியை சுத்தமான தண்ணீரில் கழுவி எடுத்தால், தலைமுடியை வேர்களில் இருந்து கருப்பாக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |