ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்

கொச்சி,
சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூடத்தையே உருவாகி வைத்திருப்பவர் வேடன்.
இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில், ‘குத்தந்திரம்’ பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதன் மூலம் பிரபலமும் ஆன இவர் இப்போது தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான ‘நரிவேட்டை’ படத்தில் ‘வாடா வேடா’ என்ற பாடலை வேடன் எழுதி பாடியுள்ளார்.
இந்த நிலையில், கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் இளம்பெண் மருத்துவர் ஒருவர் ராப் இசை பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். அதாவது, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வேடன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.